மின் சிக்கன வாரம்: திருப்பூர் பல்லடத்தில் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி

மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மின்சார வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.



திருப்பூர்: மின்சார வாரியம் சார்பில் டிசம்பர் மாதத்தில் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டது. இதில், மின் சிக்கனம், பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.



அதன்படி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் சார்பில், மின் சிக்கன வார விழாவை முன்னிட்டு மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.



பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, உடுமலை சாலையில் உள்ள மின்சார அலுவலகத்தில் நிறைவடைந்தது.



இந்த பேரணியில், வீடுகளில் தேவையில்லாத நேரங்களில் இயங்கும் மின்விசிறி மற்றும் மின் விளக்குகளை நிறுத்தி வைக்க வேண்டும். இரவு முழுவதும் மின் விளக்கை எரிய வேண்டிய இடத்தில் குறைந்த பல்புகளை பொருத்த வேண்டும், தண்ணீர் சூடேறிய உடன் உடனடியாக வாட்டர் ஹீட்டரை அணைக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன்பும், வெளியில் செல்லும் போதும் தேவையில்லாத அனைத்து மின் சாதனங்களையும் அணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



இந்தப் பேரணியில் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...