கோவை தடாகம் அருகே உலா வரும் யானை, காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்..!

தடாகம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மற்றும் காட்டெருமைகள் மாங்கரை குடியிருப்புக்கு அருகே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ஆடு மாடு மேய்ச்சலுக்காக செல்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை ஆனைக்கட்டி, தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தடாகம் பள்ளத்தாக்கு 24 வீரபாண்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட மாங்கரை பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடை மற்றும் ஆறுகளுக்கு யானை, காட்டெருமைகள் படையெடுத்து உள்ளன.



இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், தற்போது மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால், பொதுவாகவே அனைத்து பகுதிகளிலும் மூடுபனி அதிகமாக உள்ளது. குறிப்பாக தடாகம் சாலையானது மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி காணப்படுகிறது.

யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகப்பு விளக்குகளை எரியவிட்டு, கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...