கோவை தடாகம் அருகே உலா வரும் யானை, காட்டெருமைகளால் பொதுமக்கள் அச்சம் - பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்..!

தடாகம் அருகேயுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை மற்றும் காட்டெருமைகள் மாங்கரை குடியிருப்புக்கு அருகே உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், ஆடு மாடு மேய்ச்சலுக்காக செல்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்.



கோவை: கோவை ஆனைக்கட்டி, தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மற்றும் மலைவாழ் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

தடாகம் பள்ளத்தாக்கு 24 வீரபாண்டி வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட மாங்கரை பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடை மற்றும் ஆறுகளுக்கு யானை, காட்டெருமைகள் படையெடுத்து உள்ளன.



இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும், தற்போது மார்கழி மாதம் தொடங்கியுள்ளதால், பொதுவாகவே அனைத்து பகுதிகளிலும் மூடுபனி அதிகமாக உள்ளது. குறிப்பாக தடாகம் சாலையானது மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான மூடுபனி காணப்படுகிறது.

யானை நடமாட்டம் உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகப்பு விளக்குகளை எரியவிட்டு, கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...