சென்னையில் குண்டு வெடிக்கும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் - கோவையை சேர்ந்த நபர் கைது..!

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொப்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மதுக்கடையில் இலவசமாக மதுபாட்டில் தராததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், சென்னையில் குண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த அழைப்பை தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அழைப்பு விடுத்த நபரின் எண்ணை ஆய்வு செய்த போது, கோவையில் இருந்து அழைக்கப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பது தெரியவந்தது.

இதையடுத்து கோவை குனியமுத்தூர் போலீஸார் பீர்முகமதுவை கைது செய்து நடத்திய விசாரணையில் இவர் வழக்கமாக வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே டாஸ்மாக் கடையில் இலவசமாக மது பாட்டில் கொடுக்காத கோபத்தில் தான் வெடி குண்டு வைத்தாக மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...