தொண்டு நிறுவனம் மூலம் கோவைக்கு ஒரு நாள் சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் திருநங்கைகள் - நேரில் சென்று வரவேற்ற ஆட்சியர் சமீரன்

சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் உதவியுடன் விமானம் மூலம் கோவைக்கு வந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் திருநங்கைகளை விமான நிலையத்தில் ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் வரவேற்றனர்.


கோவை: சென்னையில் உள்ள Rain Drops என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னையில் இருந்து அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் திருநங்கைகளை கோயம்புத்தூர் வரை முதல் முறை விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.



இந்நிலையில், கோவைக்கு வருகை தந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் கோவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.



ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர் மற்றும் திருநங்கைகள் கோவை மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகம், பூங்கா ஆகியவற்றை பார்வையிட உள்ளதாக கூறப்படுகிறது.



இந்த வரவேற்பு நிகழ்வின் போது கோவை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூமா மற்றும் NGO நிறுவன பிரதிநிதிகள் உடன் இருந்தனர். இந்த நிகழ்வில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியும் மாணவர்களுடன் வருகை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...