கோவையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் என 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு..!

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ராஜவீதி பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


கோவை: தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ராஜவீதி பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.



நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...