கோவையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் என 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு..!

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ராஜவீதி பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


கோவை: தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ராஜவீதி பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.



நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...