கோவையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் என 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு..!

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ராஜவீதி பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


கோவை: தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ராஜவீதி பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.



நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...