கோவையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் என 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு..!

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ராஜவீதி பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


கோவை: தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ராஜவீதி பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.



நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...