கோவை ராமநாதபுரம் பகுதியில் அழுகிய நிலையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை….!

கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், இன்று வீட்டில் இருந்து கடும் நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்ட இடத்தின் அருகே விஷம் பாட்டில் கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், கடந்த வாரம் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற கார்த்திக், அங்கு பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டையால் கோபித்து கொண்டு வந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...

கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து அதிகரிக்கும் நீர்மட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையா...

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...