கோவை ராமநாதபுரம் பகுதியில் அழுகிய நிலையில் 22 வயது இளைஞர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை….!

கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் (22) என்பவர் வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (22). இவர் கோவை ராமநாதபுரம், கணேஷபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக வீட்டின் கதவு திறக்காமல் இருந்த நிலையில், இன்று வீட்டில் இருந்து கடும் நுர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கார்த்திக் சடலமாக மீட்கப்பட்ட இடத்தின் அருகே விஷம் பாட்டில் கைப்பற்றப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், கடந்த வாரம் திருப்பூரில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற கார்த்திக், அங்கு பெற்றோர்களுடன் ஏற்பட்ட சண்டையால் கோபித்து கொண்டு வந்தது தெரியவந்தது.

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...