கோவையில் விமானப்படை மருத்துவமனையை விமானப்படை தலைமை பயிற்சி கட்டளை அதிகாரி திறந்து வைத்தார்

கோவை வந்துள்ள விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



கோவை: கோவை வந்துள்ள இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் ரேஸ்கோர்ஸ் பகுதி ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



அவரது வருகையை ஒட்டி, விமானப்படை கல்லூரியில் ஏர் கமாண்டர் ராம்கிஷோர் முன்னிலையில் விமானப்படை போர் வீரர்கள் மரியாதை அளித்தனர்.



விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங் கல்லூரியின் தற்போதைய பயிற்சி குறித்தும் பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்களையும் மதிப்பாய்வு செய்தார்.



பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அங்குள்ள அம்சங்கள் புதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில், சிறப்புரை ஆற்றிய விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்கும் அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், IAF இன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...