கோவையில் விமானப்படை மருத்துவமனையை விமானப்படை தலைமை பயிற்சி கட்டளை அதிகாரி திறந்து வைத்தார்

கோவை வந்துள்ள விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



கோவை: கோவை வந்துள்ள இந்திய விமானப்படையின் பயிற்சி கட்டளை அதிகாரி ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் ரேஸ்கோர்ஸ் பகுதி ரெட் பீல்டு சாலையில் உள்ள விமான படை கல்லூரியில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.



அவரது வருகையை ஒட்டி, விமானப்படை கல்லூரியில் ஏர் கமாண்டர் ராம்கிஷோர் முன்னிலையில் விமானப்படை போர் வீரர்கள் மரியாதை அளித்தனர்.



விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங் கல்லூரியின் தற்போதைய பயிற்சி குறித்தும் பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்களையும் மதிப்பாய்வு செய்தார்.



பின்னர், விமானப்படை மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அங்குள்ள அம்சங்கள் புதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில், சிறப்புரை ஆற்றிய விமானப்படை பயிற்சி கட்டளை அதிகாரி, மன்வேந்திர சிங், பயிற்சியில் சிறந்து விளங்குவதற்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளும் அனைவருக்கும் அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.

மேலும், IAF இன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான சிறந்த உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...