நீலகிரி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் - நிவாரண உதவியையும் வழங்கினர்

நீலகிரி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரண நிதியுடன், ஆ.ராசா தமது சார்பில் தலா ஒரு லட்சத்தையும் வழங்கினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஆனிக்கல் பகுதியில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினர். இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனது சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் 4 லட்சம் ரூபாயையும் வழங்கினார்.

இதையடுத்து ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது ஒரு சிறிய ஓடையை கடக்க முயன்ற சரோஜா(65), வாசுகி(45), விமலா(35), சுசீலா(50) ஆகிய நான்கு பேரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட வேண்டிய துயர சூழ்நிலை ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நால்வரின் சடலமும் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா மற்றும் நந்தகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...