கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்படாதது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படாதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விரிவாக்க பணிகள் தாமதமே காரணம் என அதிகாரிகள் விளக்கம்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்பட சுற்று வட்டாரத்தில் உள்ள 7 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இன்று வரை நிலங்களை தமிழக அரசு விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்காததால் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள ஓடுதளத்தில் திருப்பி விடப்படும் வெளிநாட்டு விமானங்கள் எளிதில் தரையிறங்கி புறப்பட்டு செல்லும் நிலையில் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்காதது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறியதாவது, கோவை விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுதளம் 9,760 அடியாக உள்ளது.

தற்போது கோவையில் உள்ள ஓடுதள பாதையில் மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பி விடப்படும் பல வெளிநாட்டு விமானங்கள் (வைட் பாடி) எளிதில் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லும் போது பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் இன்று வரை பன்னாட்டு விமான சேவை அதிகரிக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில் விரைவில் நில்ங்களை விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, பெரிய விமானங்கள் இரு வகைப்படும். நேரோ பாடி மற்றும் வைட் பாடி என்பதாகும். பன்னாட்டு விமான நிறுவனங்கள் இரண்டு வகை விமானங்களையும் சேவைக்கு பயன்படுத்துக்கின்றன.

கோவையில் நேரோ பாடி வகை விமானங்கள் எளிதில் கையாள முடியும். வைட்பாடி விமானங்களை கையாள முடியாது என்பதை விட அவற்றை கையாள்வதில் சற்று கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் விமானம் வைட்பாடி ரகத்தை சேர்ந்தது. பிரதமர் வருகையின் போது கோவையில் இந்த விமானம் ஒரு முறை தரையிறங்கி, புறப்பட்டு சென்றுள்ளது.

ஓடுதள நீளம் 12 ஆயிரம் அடியாக அதிகரித்தால் வைட் பாடி ரகத்தை சேர்ந்த விமானங்கள் எளிதில் கையாள முடியும். தவிர பயணிகளுக்கு தேவையான வசதிகளை கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளும் விமான நிலையத்தில் அமைக்க முடியும்.

இதனால் பன்னாட்டு விமான சேவையை கோவையில் தொடங்க பல வெளிநாட்டு விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...