கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்படாதது ஏன்? - அதிகாரிகள் விளக்கம்

கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்படாதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விரிவாக்க பணிகள் தாமதமே காரணம் என அதிகாரிகள் விளக்கம்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்பட சுற்று வட்டாரத்தில் உள்ள 7 மாவட்ட மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 627 ஏக்கரில் விரிவாக்க திட்டம் 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இன்று வரை நிலங்களை தமிழக அரசு விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்காததால் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இருப்பினும் தற்போது உள்ள ஓடுதளத்தில் திருப்பி விடப்படும் வெளிநாட்டு விமானங்கள் எளிதில் தரையிறங்கி புறப்பட்டு செல்லும் நிலையில் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்காதது தொழில்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார் கூறியதாவது, கோவை விமான நிலையத்தில் தற்போது விமான ஓடுதளம் 9,760 அடியாக உள்ளது.

தற்போது கோவையில் உள்ள ஓடுதள பாதையில் மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பி விடப்படும் பல வெளிநாட்டு விமானங்கள் (வைட் பாடி) எளிதில் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லும் போது பல்வேறு கோரிக்கைகள் விடுத்தும் இன்று வரை பன்னாட்டு விமான சேவை அதிகரிக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

தமிழக அரசு விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளது. 80 சதவீதத்துக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில் விரைவில் நில்ங்களை விமான நிலைய ஆணையகத்துக்கு ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, பெரிய விமானங்கள் இரு வகைப்படும். நேரோ பாடி மற்றும் வைட் பாடி என்பதாகும். பன்னாட்டு விமான நிறுவனங்கள் இரண்டு வகை விமானங்களையும் சேவைக்கு பயன்படுத்துக்கின்றன.

கோவையில் நேரோ பாடி வகை விமானங்கள் எளிதில் கையாள முடியும். வைட்பாடி விமானங்களை கையாள முடியாது என்பதை விட அவற்றை கையாள்வதில் சற்று கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் விமானம் வைட்பாடி ரகத்தை சேர்ந்தது. பிரதமர் வருகையின் போது கோவையில் இந்த விமானம் ஒரு முறை தரையிறங்கி, புறப்பட்டு சென்றுள்ளது.

ஓடுதள நீளம் 12 ஆயிரம் அடியாக அதிகரித்தால் வைட் பாடி ரகத்தை சேர்ந்த விமானங்கள் எளிதில் கையாள முடியும். தவிர பயணிகளுக்கு தேவையான வசதிகளை கொண்ட உள்கட்டமைப்பு வசதிகளும் விமான நிலையத்தில் அமைக்க முடியும்.

இதனால் பன்னாட்டு விமான சேவையை கோவையில் தொடங்க பல வெளிநாட்டு விமான நிறுவனங்களும் ஆர்வம் காட்ட தொடங்குவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...