கோவை கிணத்துக்கடவு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

கிணத்துக்கடவில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.4.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 486 பயனாளிகளுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன் மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள சொக்கனூரில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற முகாமில் 486 பயனாளிகளுக்கு 4 கோடியை 53 லட்சத்து 64 ஆயிரத்து 985 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



பின்னர் கல் குவாரிகளால் ஏற்படும் பிரச்சனைகள், இலவச வீட்டு மனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.



இந்த முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊராட்சிகளின் துணை இயக்குனர் கமலக்கண்ணன், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா, சொக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...