கோவை சூலூர் அருகே பேருந்து நிறுத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

சூலூர் அடுத்த சின்னப்புத்தூர் கிராமத்தில் பேருந்து நிறுத்தாமல் ஓட்டுனர்கள் அலட்சியமாக செயல்படுவதால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த செஞ்சேரிப்புதூர் அருகே உள்ளது சின்னப்புத்தூர் கிராமம். பல்லடம் - உடுமலை பிரதான சாலையில் உள்ள இந்த கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கேத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல், ஏராளமான தொழிலாளர்கள் பல்லடம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்காக சென்று வருகின்றனர். இந்நிலையில் பல்லடம் முதல் உடுமலை செல்லும் பேருந்துகள் சின்னப்புத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதில்லை என்று தொடர் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

பேருந்துகள் சரிவர நிற்காததால் பொதுமக்கள் சந்தித்து வரும் இன்னல்களை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாராக கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இன்று காலை பல்லடம் உடுமலை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தின் போது, பேருந்து பிரச்சனையால் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் சிரமம் அடைந்து வருவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.



இந்நிலையில், சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுல்தான்பேட்டை காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.

சுமார் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல்லடம் - உடுமலை சாலையில் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...