வனவாசத்திற்கு பின் மீண்டும் தாய் கட்சிக்கு வந்துவிட்டேன் - பா.ஜ.க.,வில் இருந்து விலகிய ம.நீ.ம நிர்வாகி..!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.



கோவை: இரண்டு வருட வன வாசத்திற்கு பிறகு தாய்க்கட்சியான மக்கள் நீதி மய்யத்திற்கு தாயுள்ளத்தோடு நம்மவர் அரவணைத்து ஏற்றுக் கொண்டார், என்று ம.நீ.ம முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பா.ஜ.க.,வில் இணைந்த மக்கள் நீதி மய்யத்தின் (ம.நீ.ம) முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.

மீண்டும் கட்சியில் இணைந்ததை அடுத்து, கோவை டவுன்ஹால் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், தொண்டர்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு வரவேற்பு கொடுத்தனர். கடைக்கோடி தொண்டர்கள் வரை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி கூற முதற்பயணமாக கோவை வந்துள்ளேன்.

உடனடியாக களத்திற்கு சென்று தொண்டர்களின் கருத்தை கேட்டு அதனை தன்னிடம் கூறுமாறு நம்மவர் என்னிடம் தெரிவித்தார். அனைத்து மாவட்ட செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், இங்குள்ளவர்கள் தேர்தலில் உழைத்தமைக்கு நன்றி செலுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

நாடாளுமன்ற தேர்தலில் ம.நீ.ம அமோக வெற்றி பெற ஆலோசனை நடத்தப்படுகிறது. தேர்தலுக்கு இது முதல் தொடக்கமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் தங்கவேலு, மாநில செயலாளர்கள் மயில்சாமி, மூகாம்பிகா ரத்தினம், அனுஷா ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...