உதகை அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமான 4 பெண்களில் 3 பேரின் உடல்கள் மீட்பு - உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிவாரணம்

உதகை அடுத்த சீகூர் ஆனிக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 பெண்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சீகூர் வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆனிக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் மட்டுமே திறக்கப்படும் இக்கோவிலுக்கு கார்த்திகை தீபம் என்பதால் நேற்று திருவிழாவிற்காக கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலை சென்றடைய ஆனிக்கல் ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு உதகை, கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கோவிலை சென்றடைய பக்தர்கள் ஒவ்வொருவராக ஆணிக்கல் ஆற்றை கடந்து சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக, ஆற்றை கடந்த 4 பெண்கள் திடீரென வெள்ளத்தில் சிக்கி மாயமாகினர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள், உடனடியாக சீகூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் சேர்ந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விசாரணையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்கள் உதகை கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35) மற்றும் சுசிலா(56) என்பது தெரியவந்தது.



இதனிடையே நேற்று காலை வரை ஆணிக்கல் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீரே ஓடிய நிலையில், மதியத்திற்கு மேல், மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இரவு நேரம் என்பதாலும் ஆற்றில் தொடர்ந்து அதிகமான தண்ணீர் ஓடியதாலும் உடல்களை கண்டுபிடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.



இதனையடுத்து இன்று காலை 7 மணி முதல் உதகை, கூடலூரை சேர்ந்த தீயணைப்பு துறையினர் மற்றும் சீகூர் வனத்துறையினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து ஆனிக்கல் ஆற்றின் இருபுறமும் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.



தீவிர தேடுதலில், சம்பவ இடத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் சரோஜா, வாசுகி, விமலா ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் சுசிலா உடலை 7 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் மீட்பு குழுவினர் அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.



இந்நிலையில்a சம்பவத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக நிவாரண தொகையாக தலா 4 லட்சம் வீதம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே சீகூர் வனப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு செல்லும் சாலைகள் மோசமாக உள்ளதால் அவற்றை சீரமைத்து தர வேண்டும் என்றும், இறந்த பெண்களின் குடும்பங்கள் ஏழ்மையில் உள்ளதால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட சரோஜா, வாசுகி, விமலா மூன்று பெண்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...