கோவையில் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்கள் மற்றும் இசைப்பேழை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.


கோவை: இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழாவில், பாரதியார் பாடல்களின் இசைப்பேழை மற்றும் பாரதியார் நினைவு நூற்றாண்டு நூல்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.



பின்னர், இது தொடர்பாக நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு இளம் பாரதி விருதினை வழங்கி பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பாரதியாரின் பிறந்தநாளான டிசம்பர் 11ம் தேதியை தேசிய மொழிகளின் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பாரதியாரை பெருமைப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு அவரது பிறந்தநாளான்று 14 அறிவிப்புகளை வெளியிட்டது.

வாரணாசியில் பாரதியார் தங்கிய இடத்தில் புகைப்படங்களுடன் கூடிய அருங்காட்சியத்தை நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார். பாரதியாரின் பாடல்கள் இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் ஒலிக்க வேண்டும். மகாகவி பாரதியாரின் நவீன நாடகமான பாஞ்சாலி சபதம் நாடகத்தின் தொகுப்பு மற்றும் பாரதியாரின் பாடல்கள் இசைப்பேழை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நல்லதை எண்ண வேண்டும். தெளிந்த நல்ல அறிவு வேண்டும் போன்ற கருத்துக்களை தன் பாடல்கள் மூலம் பாரதியார் முன் வைத்துள்ளார். அதேபோல, பெண் உரிமை, சாதி ஒழிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு கவிதைகள் எழுதியுள்ளார்.

பன்முக ஆளுமை கொண்ட பாரதியார், இந்தியாவில் உள்ள 20 மொழிகளில் பேசவும், எழுதவும் கூடிய திறமை கொண்டிருந்தார். ஆகேவே, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் பாரதியாரின் கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்யும் முயற்சி நடைபெற்று வருகின்றது, இவ்வாறு ஆட்சியர் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பொறுப்புக் குழு உறுப்பினர்கள் டாக்டர் வாசுகி, முனைவர் லவ்லினா, தமிழ் துறை தலைவர் முனைவர் சி.சித்ரா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...