நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: கோவையில் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்.


கோவை: தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை ரஜினியின் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.



ரஜினி பிறந்த நாளான இன்று சலீவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து மாலையில் ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடத்தினர்.

கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.



ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிர்வாகிகள் பாபு, பட்டணம் ரவி, பிரேம்நாத், மணிவண்ணன், வடிவேல், வெள்ளியங்கிரி, செந்தில்குமார், ராஜேஷ்குமார், ஆனந்த கிருஷ்ணசாமி, செல்லதுரை, ரஜினி கண்ணன், சிவகுமார், பிரபு, பாலாஜி, ஆறுச்சாமி, சாணவாஸ், சுதாகர், ஷான் பாஷா, ஆட்டோ பாபு, ஆட்டோ மனோகர், முருகேசன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...