தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும் - கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன், தமிழக அரசின் சார்பில் முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் பலூன் திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஹோட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு ஹோட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம், இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவையும் புதுப்பிக்க உள்ளோம்.

இது வரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில்,பலூன் திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம். இந்த பலூன் திருவிழாவில்மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...