வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கிய கோவை ஆட்சியர்..!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் புதிய தொழில்களை துவங்க 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய தலா ரூ.15 லட்சம் கடன் உதவியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.


கோவை: கிராமப்புற சமூகங்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற நிறுவன மேம்பாடு நிதி மற்றும் வேலை வாய்ப்புக்கான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு "வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை தொடங்கவும் தலா ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இதில், ரூ.15 லட்சம் கடன் உதவியில், ரூ.4.50 லட்சம் மானியம் - அதாவது கடன் உதவியில் 30 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. கடனாக வாங்கிய தொகையில் ரூ.10.50 லட்சத்தை பயனாளிகள் திரும்ப செலுத்தினால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...