சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பறிமுதல் - 4 பேர் கைது

தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே உள்ள தனியார் குடோனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்கள் கண்டுபிடிப்பட்டது.

இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுதாகரன் (43), குருநாதன் எத்திராஜ் (50), செல்வகுமார் (47), சிவக்குமார் (38) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...