திருப்பூர் அவிநாசி அருகே மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு

அவிநாசி அடுத்த கானூரில் உள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்காவில், மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீபத்தையொட்டி தர்கா முழுவதும் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த கானூர் ஊராட்சியில் அமைந்துள்ள தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா தமிழகத்தில் மிகவும் சிறப்பு பெற்றதாகும்.



தமிழ்நாடு வக்பு வாரியத்தில் இணைக்கப்பட்ட இந்த தர்காவில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சென்று வழிபடுவது வழக்கம்.



இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் அப்பகுதி மக்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு பெண்கள் தர்காவில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும், தர்காவை சுற்றிலும் பெண்கள் கார்த்திகை விளக்குகளை ஏற்றினர். தர்காவில் தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதால் இந்த தர்காவிற்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்து தரப்பு மக்களும் வருகிறார்கள்.

கார்த்திகை தீபத்தின் போது இப்பகுதியில் உள்ள மக்கள் இங்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆண்டுதோறும் வழக்கமாக கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது. தொன்று தொட்டு இங்கு கார்த்திகை தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது.

மேலும் இங்கு ஆண்டு தோரும் சந்தனக்கூடு உருஷ் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சந்தனக்கூடு உருஷ் விழாவில் கோவை, திருப்பூர், ஈரோடு, சத்தி, மேட்டுப்பாளையம், சென்னை, மைசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...