ரயில்வே துறைக்கு பொருட்கள் தயாரித்து வழங்குவதில் புதிய நடைமுறை அமல் - கோவையை சேர்ந்த 300 தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

கோவை ரயில்வே துறைக்கான சிக்னல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து வழங்குவதற்கான டெண்டர் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கோவையில் உள்ள 300 உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உற்பத்தி பிரிவின்கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் பம்ப்செட். கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ரயில்வேதுறையின் தேவையை பூர்த்தி செய்வதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ரயில்வே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சிக்னல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான தொழில்நுட்ப உபகரணங்கள் உற்பத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் மூலம் சுமார் 50,000 தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ரயில்வே துறையில் வழக்கமான டெண்டர் நடைமுறையில் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் கோவையில் உள்ள நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவையை தலைமையகமாக கொண்டு செயல்படும் ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் (RASA) தலைவர் சுருளிவேல் கூறியதாவது,

கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் ரயில்வேதுறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.

சிக்னல்களுக்கு பயன்படுத்தப்படும் பாயின்ட் மெஷின், ரிலே, தானியங்கி கேட்களுக்கு பயன்படுத்தப்படும் பூம் என்ற பொருட்கள் உள்ளிட்டவை தயாரித்து வழங்கப்பட்டு வந்தன.

மேலும் தண்டவளாங்களுக்கு தேவையான ஓபன் லைன் பொருட்கள், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவை கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் சில பொருட்களாகும். இதை தவிர்த்து பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வழக்கமாக அடுத்த ஆண்டுக்கான டெண்டர் நவம்பர், டிசம்பரில் வெளியிடப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொருட்களை ரயில்வே துறைக்கு விநியோகிக்க தொடங்குவார்கள்.

இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறையை ரயில்வே நிர்வாகம் அமல்படுத்தி உள்ளது.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளியிடப்படும் டெண்டரில் பங்கேற்று பணி ஆணை பெற அனுமதி பெறும் நிறுவனங்கள் அடுத்த ஒரு ஆண்டுக்கு மட்டுமின்றி 2024ஆம் ஆண்டு வரை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கையால் நடைமுறையில் பல சிக்கல்களை தொழில் முனைவோர் சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இன்று காணப்படும் மூலப்பொருட்களின் சந்தை விலையை கொண்டு 2024-வரை எவ்வாறு பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்து வழங்குவது.

தவிர தற்போது பாதுகாப்பு முதலீட்டு நிதி மொத்த பணி ஆணை மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. புதிய நடைமுறையால் நிதிச்சுமையும் அதிகரிக்கும். 2 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

இந்த பிரச்சினைகள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை பாதித்துள்ள காரணத்தால் ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளை விரைவில் நேரில் சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...