கோவையில் எந்தவித பரபரப்புமின்றி இதய தெய்வம் மாளிகை: குழப்பத்தில் கட்சித் தொண்டர்கள்!


தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வம் நேற்றும் இரவு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெ. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா குறித்தும், தன் அமைச்சரவை சகாக்கள் குறித்தும் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். இதை தொடர்ந்து, தமிழக  அரசியல் களத்தை பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இரு தரப்பாக பிளவடைந்துள்ள கட்சியில் எந்தபக்கம் செல்வதென்று சட்டமன்ற உறுப்பினர்களுடன்  அ.தி.மு.க தொண்டர்களும் கலக்கமடைந்தனர்.



இந்த நிலையில், கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகை எந்த வித பரபரப்புமின்று காட்சியளிக்கிறது. கட்சி தொடர்பான எந்த பிரச்சனையின் போதும், விழாக்களின் போதும் தொண்டர்கள் படை சூழ காணப்பட்ட இதய தெய்வம் மாளிகை தற்போது கலையிழந்து காணப்படுகிறது. கட்சி அலுவலகத்திற்குள் இருக்கும் ஒரு சிலரும் என்ன செய்வதென்று அறியாமல் தொலைக்காட்சியை பார்த்தபடி பெரும் குழப்பத்தில் அமர்ந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுக்கள் வெடித்தும் கொண்டாடி வருகின்ற நிலையில், கோவை மிகுந்த அமைதியான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...