உலக மண் தினம்: ஈஷாவின் 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் கோவையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மண்‌ தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள ஈஷாவின் ஆதியோகி சிலை முன்பு மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ நிலத்தை பாதுகாப்பது குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கோவை: உலக மண்‌ தினத்தை முன்னிட்டு 'மண்‌ காப்போம்‌' இயக்கம்‌ சார்பில்‌ கோவையில் உள்ள ஈஷா அமைப்பின் ஆதியோகி சிலை முன்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (டிசம்பர்‌ 5) நடைபெற்றது. இவ்விழாவில்‌ ஏராளமான தன்னார்வலர்கள்‌ கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும்‌, ஸ்டிக்கர்கள்‌ மற்றும்‌ துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்‌ பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்‌.



இது தவிர கோவையை சுற்றியுள்ள பகுதிகளான பொள்ளாச்சியில்‌ லஷ்மி ஜூவல்லரி, பழமுதிர்‌ நிலையம்‌, திஷா ஸ்கூல்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌, உடுமலைபேட்டையில்‌ நகைக்கடை வீதி, நேதாஜி மைதானம்‌, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெற்றன.

மண்‌ணை காப்பதன்‌ அவசியத்தை உணர்த்தும்‌ விதமாக தன்னார்வலர்கள்‌ இலவச மரக்கன்றுகள்‌ வழங்கியும்‌, துண்டுப்பிரசுரம்‌, ஸ்டிக்கர்‌ விநியோகித்தும்‌ மக்களுக்கு மண்‌ வளம்‌ காக்கப்பட வேண்டிய அவசியம்‌ குறித்து விளக்கினர்‌.

இது தொடர்பாக தன்னார்வலர்கள்‌ கூறியதாவது, உலகளவில்‌ மண்‌ வளம்‌ மிக வேகமாக குறைந்து வருகிறது.

உலகளவில்‌ சுமார்‌ 52 சதவதம்‌ விவசாய நிலம்‌ வளம்‌ இழந்துவிட்டதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. மண்ணில்‌ குறைந்தபட்சம்‌ 3 சதவீதம்‌ கரிம சத்து இருந்தால்‌ தான்‌ அதை மண்‌ என்றே அழைக்க முடியும்‌ என விஞ்ஞானிகள்‌ கூறுகிறார்கள்‌.

ஆனால்‌, இந்தியாவில்‌ 63 சதவீத விவசாய நிலங்களில்‌ கரிம சத்தின்‌ அளவு 0.5க்கும்‌ குறைவாக உள்ளது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால்‌, உணவு பற்றாகுறை, தண்ணீர்‌ பஞ்சம்‌, உள்நாட்டு கலவரம்‌ என பல அபாயகரமான பிரச்சிகனைகள்‌ ஏற்படும்‌.

இதை தடுக்கவும்‌, மண்‌ வளப்‌ பாதுகாப்பு குறித்த சட்டங்கள்‌ மற்றும்‌ கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு அவர்கள்‌ மண காப்போம்‌ இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார்‌. இதற்காக அவர்‌ மார்ச்‌ 21-ம்‌ தேதி முதல்‌ 100 நாட்களில்‌ 27 நாடுகளுக்கு மோட்டார்‌ சைக்கிளில்‌ சவாலான பயணம்‌ மேற்கொண்டு உலகளவில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌.

இதன்‌ விளைவாக, 74 நாடுகள்‌, 11 இந்திய மாநிலங்கள்‌, 9 ஜ.நா அமைப்புகள்‌ இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும்‌, இதுவரை 391 கோடி மக்களும்‌ இவ்வியக்கத்திற்காக குரல்‌ கொடுத்துள்ளனர்‌.

அனைத்து விவசாய நிலங்களிலும்‌ குறைந்தபட்சம்‌ 3 முதல்‌ 6 சதவீதம்‌ கரிம சத்து இருக்க வேண்டும்‌. அதற்காக செயல்‌ செய்யும்‌ விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும்‌.

மர விவசாயம்‌ செய்யும்‌ விவசாயிகளுக்கு கார்பன்‌ கிரெடிட்‌ என்ற பெயரில்‌ மானியம்‌ வழங்க வேண்டும்‌. 3 சதவீதற்கும்‌ மேல்‌ கரிம சத்து கொண்ட மண்ணில்‌ விளையும்‌ விளைப்‌ பொருட்களுக்கு கூடுதல்‌ விலை வழங்க வேண்டும்‌ என்பது இவ்வியக்கத்தின்‌ பிரதான பரிந்துரைகள்‌ ஆகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உலக மண்‌ தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்‌ 1000க்கும் மேற்பட்ட இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின்‌ தன்னார்வலர்கள்‌ நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...