பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது - திருப்பூரில் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முறையாக நிறைவு செய்ய அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுமே தவிர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது என்றார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இதனையடுத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வீடு கட்டும் திட்டம் குறித்து அவிநாசியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாதந்தோறும் அவர்களுக்கான உதவித்தொகை முறையாக வருகிறதா என்பது குறித்தும் கேட்டறியப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்ற விவகாரம் என்பது வேறு இலங்கையிலிருந்து தமிழகத்தை நம்பி வந்தவர்களுக்காக கலைஞர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கான உதவி செய்து வருவது என்பது வேறு.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள மாணவர்களுக்காக பொறியியல் மற்றும் வேளாண்மை கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்தும் அவர்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு ஆதரவு மற்றும் முழு செலவையும் ஏற்றுக் கொள்வது என்பதை தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நிறைவு பெறாத பட்சத்தில் அவற்றை முறையாக நிறைவு செய்ய அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுமே தவிர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படாது எனவும் அவ்வாறு எங்கேனும் மறுக்கப்பட்டால் உடனடியாக கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...