அன்னூர் தொழில் பூங்கா: எங்கள் நிலங்களை காப்பாற்றுங்கள் விநாயகரே...! - கோவை புலியகுளம் கோவிலுக்கு மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம்

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து, அதிகாரிகளிடம் மனு அளித்து பயனில்லை என்பதால் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூரில் அமையவுள்ள தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புலியகுளம் விநாயகருக்கு மனு கொடுக்க நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், தொழில்பூங்காவிற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் விவசாய மக்கள் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அன்னூரில் இருந்து புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் விநாயகரிடம் அளிக்க உள்ள மனுவில், நிலங்களை கையகப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் மனு அளித்து எந்த பயனும் இல்லாததால், நீங்கள் (விநாயகர்) எங்களை காப்பாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...