கூடலூரில் PM2 மக்னா யானை தாக்கி மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு - மக்கள் அச்சம்..!

PM2 மக்னா யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டியின் உடல் யானை தாக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா மற்றும் புளியம்பாறை பகுதியில் PM2 என்ற மக்னா யானை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.

இந்த யானை இதுவரை 45க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியதுடன் கடந்த 19ஆம் தேதி பாப்பாத்தி என்ற மூதாட்டியையும் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 12 நாட்களாக அந்த யானையைப் பிடிக்கும் பணியில் கூடலூர் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அந்த யானை தொடர்ந்து போக்கு காட்டி வருவதனால் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் 13-வது நாளாக இன்றும் ட்ரோன் கேமரா மூலம் யானையை கண்காணிக்கும் பணி நடைபெற்றது.

இதன் காரணமாக புளியம்பாறை அருகே உள்ள கற்குபாளி என்ற இடத்தில் PM2 மக்னா யானை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் பின் தொடர்ந்து சென்ற போது, மூதாட்டி ஒருவரின் உடல் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சடலமாக கிடந்த மூதாட்டி புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி (58) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.



இந்நிலையில், அவரது உடலை மீட்ட காவல்துறையினர் உடனடியாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...