உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி உதகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் - அமைச்சர் கா.ராமச்சந்திரன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்

உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்க நிகழ்வில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்து கொண்டு, எய்ட்ஸ் தின உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார்.



பின்னர் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் உள்ளிட்டோர் உலக எய்ட்ஸ் தினத்திற்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எச்.ஐ.வி நோய் என்பது அத்தொற்றுள்ளவர்களுடன் சேர்ந்து விளையாடினாலோ, உபயோகித்த பொருட்களை உபயோகப்படுத்தினாலோ பரவாது. அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது ஆதரவை கொடுத்து அவர்களும் அவர்கள் குழந்தைகளும் வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் எச்.ஐ.வி எய்ட்ஸ்கான ஆலோசனை மற்றும் பரிசோதனையானது அனைத்து அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வரும் நம்பிக்கை மையம், நடமாடும் நம்பிக்கை மைய ஊர்தியின் மூலம் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு அவர்களின் நிலை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு எச்.ஐ.வி எய்ட்ஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று வர கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஓய்வூதியமும், முதியோர் உதவித்தொகை, காப்பீட்டு திட்டம், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து குடும்ப அட்டை, கல்வி உதவித்தொகை போன்ற வசதிகளையும் செய்து வருகிறது.

அதனைத்தொடர்ந்து தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை 16 பயனாளிகளுக்கு மாதந்தோறும் பெறுவதற்கான ஆணையையும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கி சமபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அம்ரித் உதகை ரயில் நிலையத்தில் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பயணத்தை தொடங்கி வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஒட்டுவில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டினார்.

இந்த பேரணியில் எமரால்டு ஹைட்ஸ் பெண்கள் கல்லூரி, செவிலியர் பயிற்சி பள்ளி, ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மற்றும் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இப்பேரணியானது உதகை ரயில் நிலையத்தில் தொடங்கி, உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, இணை இயக்குநர் (மருத்துவம்) பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனப்ரியா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை வட்டாட்சியர் ராஜசேகர், மாவட்ட திட்ட அலுவலர் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவழகன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...