திருப்பூர் பல்லடத்தில் தனியார் கழிவு பஞ்சு அரவை ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின..!

பல்லடம் அடுத்த பூமலூரில் தனியாருக்கு சொந்தமான பஞ்சு அரவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்திய நிலையில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சமீம். இவருக்கு சொந்தமான கழிவு பஞ்சு அரவை ஆலை பூமலூர் வண்ணந்தோட்டம் பகுதியில் இயங்கி வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட 50 மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சு மூட்டைகளில் தீ மளமளவென பரவிய நிலையில், தொழிலாளர்கள் அங்கிருந்து பத்திரமாக தப்பிச் சென்றுள்ளனர்.



இதையடுத்து தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினர் மற்றும் மங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 5 தண்ணீர் லாரிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் மற்றும் கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...