கோவை மணியகாரம்பாளையம் அருகே பொதுச் சாலை ஆக்கிரமிப்பை போலீசார் உதவியுடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுச் சாலையை இருபுறமும் கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.



இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு புதிய குடியிருப்பு வழியாக சென்ற சாலையை ஆக்கிரமித்து கேட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கேட்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முயற்சித்தனர்.



இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்ற வேண்டாம், கால அவகாசம் கொடுங்கள் என மாநகராட்சி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு பதில் கிடைத்த பின் மாநகராட்சி பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவின் பேரில் இருபுறமும் இருந்த கேட்டுகள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...