கோவை மணியகாரம்பாளையம் அருகே பொதுச் சாலை ஆக்கிரமிப்பை போலீசார் உதவியுடன் அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் பொதுச் சாலையை இருபுறமும் கேட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்ததை குழாய் பதிக்கும் பணிக்காக ஜேசிபி மூலம் காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.



கோவை: கோவை மாவட்டம் கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் சீனிவாசா நகர் செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.



இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் கோவை மாநகராட்சி நகர்ப்புற மேம்பாட்டு அலுவலர் விமலா தலைமையில் அதிகாரிகள் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு புதிய குடியிருப்பு வழியாக சென்ற சாலையை ஆக்கிரமித்து கேட் அமைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்வழியாக குழாய்களைக் கொண்டு செல்வதற்கு குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



இதனையடுத்து உடனடியாக சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கேட்களை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்ற முயற்சித்தனர்.



இதற்கு அந்த வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக அகற்ற வேண்டாம், கால அவகாசம் கொடுங்கள் என மாநகராட்சி அலுவலரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியோருக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதற்கு பதில் கிடைத்த பின் மாநகராட்சி பணி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



இந்நிலையில், மாநகராட்சி அதிகாரியின் உத்தரவின் பேரில் இருபுறமும் இருந்த கேட்டுகள் அகற்றப்பட்டன. குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.



இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...