கோவை அரசு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தன்னை தாக்கியதாக ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார்

காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த பெண் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அவரை வெளியே செல்லுமாறு தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை காந்திமாநகர் ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகவல்லி. இவருடைய தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு கை, கால் வீக்கம் உட்பட பல்வேறு உடல் உபாதைகள் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதற்காக, இவர் கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு வருட காலமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், இதய பிரச்சினை சம்பந்தமாகவும் மருத்துவமனைலேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறு அவ்வப்போது பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த கற்பகவல்லி இரவு அங்கேயே தங்கி உள்ளார்.



அப்போது, இரவு நேரத்தில் பணியாற்றும் காவலாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஒன்று சேர்ந்து உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு தன்னை வற்புறுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியே செல்ல மறுப்பு தெரிவித்த போது, அங்கு பணியில் இருந்த காவலாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தன்னை அடித்து ஆடைகளை கிழித்து உடைமைகளை வெளியே தூக்கி எறிந்து பிரச்சனை செய்ததாக அப்பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.



பின்னர், தான் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முறையிட்ட போது, அவர்களும் தன்னை உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு நிர்ப்பந்தித்ததாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...