டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையில் விலக்கு அளிக்க நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் கோரிக்கை

டெஸ்ட் பர்சேஸ் என்ற நடைமுறையை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்கக்கோரியும், அதில் இருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், மாவட்ட வணிக வரி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



நீலகிரி: தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை சார்பில் சில்லறை விற்பனை கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என்னும் புதிய நடைமுறை மற்றும் சரக்கு வாகன தணிக்கை முறை அமலுக்கு வந்துள்ளது.



இந்த புதிய நடைமுறையால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த முறையிலிருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க கோரி இன்று அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கத்தினர் அந்தந்த மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



அதன் படி, நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் உதகையில் உள்ள மாவட்ட வணிக வரி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் பேசியதாவது:

டெஸ்ட் பர்சேஸ் முறை என்பது ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு விதிக்க வேண்டும் என்றும் ஆனால் சிறு, குறு வியாபாரிகளுக்கு விதிப்பதால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் கடைகளில் சோதனை நடத்தி 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் இந்த புதிய நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு வணிகர்களிடையே ஏற்படும் வரை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பரமேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...