டெஸ்ட் பர்சேஸ் நடைமுறையில் விலக்கு அளிக்க நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் கோரிக்கை

டெஸ்ட் பர்சேஸ் என்ற நடைமுறையை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்கக்கோரியும், அதில் இருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில், மாவட்ட வணிக வரி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



நீலகிரி: தமிழகம் முழுவதும் வணிகவரித்துறை சார்பில் சில்லறை விற்பனை கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் என்னும் புதிய நடைமுறை மற்றும் சரக்கு வாகன தணிக்கை முறை அமலுக்கு வந்துள்ளது.



இந்த புதிய நடைமுறையால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு குறு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த முறையிலிருந்து சிறு குறு வியாபாரிகளுக்கு விலக்கு அளிக்க கோரி இன்று அனைத்து மாவட்டங்களிலும் வணிகர் சங்கத்தினர் அந்தந்த மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



அதன் படி, நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் உதகையில் உள்ள மாவட்ட வணிக வரி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட தலைவர் பரமேஷ்வரன் பேசியதாவது:

டெஸ்ட் பர்சேஸ் முறை என்பது ஆண்டிற்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு விதிக்க வேண்டும் என்றும் ஆனால் சிறு, குறு வியாபாரிகளுக்கு விதிப்பதால் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் கடைகளில் சோதனை நடத்தி 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதாகவும் இந்த புதிய நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு வணிகர்களிடையே ஏற்படும் வரை 6 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் பரமேஷ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...