கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையம், ஜே.எம்.ஜே. ஹவுசிங் அறக்கட்டளை மற்றும் கோவை மத்திய அரிமா சங்கம் இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,விழிப்புணர்வு முகாம், சர்க்கரைநோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில்நடைபெற்ற முகாமில் ல் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய அரிமா சங்க மாவட்ட கவர்னர் ராம்குமார், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பங்கேற்றனர்.

இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறிதல் நடத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறியப்பட்டு இலவசமாக லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்தை சீர் செய்ய ஜே.எம்.ஜே. ஹவுசிங் நிறுவனம் சார்பில் அதன் மேலான் இயக்குநர் வில்சன் பி தாமஸ்பேரி கார்டுகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...