கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்

கோவை துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல் நிலையம், ஜே.எம்.ஜே. ஹவுசிங் அறக்கட்டளை மற்றும் கோவை மத்திய அரிமா சங்கம் இணைந்து இலவச சர்க்கரை நோய் கண்டறிதல்,விழிப்புணர்வு முகாம், சர்க்கரைநோயாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம் துடியலூர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில்நடைபெற்ற முகாமில் ல் சிறப்பு விருந்தினர்களாக கோவை மத்திய அரிமா சங்க மாவட்ட கவர்னர் ராம்குமார், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபுதீன் பங்கேற்றனர்.

இம்முகாமில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறிதல் நடத்தப்பட்டது. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறியப்பட்டு இலவசமாக லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துடியலூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்போக்குவரத்தை சீர் செய்ய ஜே.எம்.ஜே. ஹவுசிங் நிறுவனம் சார்பில் அதன் மேலான் இயக்குநர் வில்சன் பி தாமஸ்பேரி கார்டுகளை துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...