கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார்,ஜாமினில் அவர்களை விடுதலை செய்தனர்.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார், விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கண்ணப்ப நகரைச் சேர்ந்த வேடியப்பன், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விமல் ராஜ், பி.என்.புதூரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்ததுடன் 5 பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...