கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.27.6 லட்சம் அபராதம் வசூல் - 276 பேர் மீது வழக்கு

மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் அபராத தொகை உயர்த்தப்பட்ட நிலையில் கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 276 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.10,000 என ரூ.27.6 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன் படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, அதிவேகத்தில் வாகனம் இயக்கினால் ரூ.1,000, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 என கடுமையாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி முதல் கடந்த 16 ஆம் தேதி வரை சுமார் 24 நாட்களில் மட்டும் மோட்டார் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 7,636 பேருக்கு ரூ.97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டிய 29 பேருக்கு தலா ஆயிரம் என ரூ.29,000 அபராதமும், சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிச் சென்ற 88 பேருக்கு தலா ரூ.500 என ரூ.44 ஆயிரமும் விதிக்கப்படுள்ளது.

இதனிடையே, குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் ரூ.2,000-ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த 24 நாட்களில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 276 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.27.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல செல்போன் பேசியவாறு வாகன ஓட்டிய 242 பேருக்கு தலா ரூ.1,000 என ரூ.2.4 லட்சம், சிக்னலை கடந்த சென்ற 714 பேருக்கு தலா ரூ.500 என ரூ.3.6 லட்சம் , ஹெல்மெட் அணியாமல் சென்ற 5,892 பேருக்கு தலா ரூ.1,000 என ரூ.58.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது, சாலை விதிகளை மீறியவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறித்த ரசீதுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும் உங்களது வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய எம்.பரிவாகன் என்ற செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...