திருப்பூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் - கூடுதல் காவல் தலைமை இயக்குநர் துவக்கி வைத்தார்

குள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், அங்கு பயிற்சியும் மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளேகவுண்டன் புதூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாட்டோஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் கலந்து கொண்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் துப்பாக்கி சுடும் மையத்தின் தரத்தை ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் அனுபவம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.



இதனையடுத்து பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் கன் வகைகளை பார்வையிட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரனும் அவருடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார்.



இறுதியாக இருவருக்கும் பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...