திருப்பூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் - கூடுதல் காவல் தலைமை இயக்குநர் துவக்கி வைத்தார்

குள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், அங்கு பயிற்சியும் மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளேகவுண்டன் புதூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாட்டோஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் கலந்து கொண்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் துப்பாக்கி சுடும் மையத்தின் தரத்தை ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் அனுபவம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.



இதனையடுத்து பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் கன் வகைகளை பார்வையிட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரனும் அவருடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார்.



இறுதியாக இருவருக்கும் பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...