அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து; 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.



அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த சப்தத்துடன் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



காயமடைந்த இருவரும் வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...