அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் மீண்டும் தீ விபத்து; 2 ராணுவ வீரர்கள் படுகாயம்

இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று மீண்டும் ஏற்பட்ட தீ விபத்தில், வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.



அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் இந்திய ராணுவத்திற்கு தேவையான வெடி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 19 ஆம் தேதி அதிகாலையில் தொழிற்சாலையில் உள்ள சிடி செக்சனில் பலத்த சப்தத்துடன் சிலிண்டர் வெடி விபத்து நடந்தது. அதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை DSC செக்சனில் பைப் வெல்டிங் பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில், அங்கு பணியாற்றி வந்த ஹிமாஞ்சு, மனோஜ்குமார் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.



காயமடைந்த இருவரும் வெடி மருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...