திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டடங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம்,பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 75.43 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...