திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டடங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம்,பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 75.43 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...