திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கட்டடங்கள் - காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், புதிய கட்டடங்களை சென்னையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம்,பூ மார்க்கெட், தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதிதாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்நிலையில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து 75.43 ரூபாய் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை ஒட்டிய பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், பூ சந்தை மற்றும் தென்னம்பாளையம் சந்தை ஆகிய கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.



திருப்பூரில் நடைபெற்ற கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...