ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது - கோவையில் நல்லாசிரியர் ரவிக்குமார்

கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் பங்கேற்ற நல்லாசிரியர் ரவிக்குமார், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான மரியாதை, பொறியியலின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நேற்றைய தினம் (21.11.2022) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் பொறியியல் எனும் தொழிற்கல்வியை செயல்முறையில் கற்பது மிக முக்கியம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வரவேற்றார்.



இதனை தொடர்ந்து முதலாமாண்டு துறைத்தலைவர் முனைவர்.சிவமணி, மாணவர்கள் எந்த நேரத்திலும் அவர்களுடைய‌ தேவைகள் மற்றும் உதவிகளை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இதனையடுத்து, இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் கேசவமூர்த்தி, தொழில்நுட்ப வளர்ச்சியும் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து பேசினார்.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 2022 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் ரவிக்குமார் பேசியதாவது, ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது. ஆசிரியர்களை தீக்குச்சி என்று புகழ்ந்தார்.

சொந்தங்களை விட நட்பு பெரியது எனக்கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களுக்கு தாய் மொழி அறிவு அவசியம். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நகைச்சுவை மிக்க பேச்சால் கலையரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இறுதியாக கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி கூறியதாவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்லூரி முக்கியத்துவம் தருகிறது. மாணவர்கள் பெற்றோருக்கு மதிப்பு தர வேண்டும், மாணவர்களே கல்லூரியின் மிகப்பெரிய சொத்து.

இக்கல்லூரியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும், வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கின்றனர். உங்கள் வாழ்க்கையில் பொறியியல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லை. பொறியியலின் தேவை மற்றும் அதனின் வருங்கால வளர்ச்சி குறித்தும் பேசினார்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...