ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது - கோவையில் நல்லாசிரியர் ரவிக்குமார்

கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் பங்கேற்ற நல்லாசிரியர் ரவிக்குமார், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான மரியாதை, பொறியியலின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நேற்றைய தினம் (21.11.2022) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் பொறியியல் எனும் தொழிற்கல்வியை செயல்முறையில் கற்பது மிக முக்கியம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வரவேற்றார்.



இதனை தொடர்ந்து முதலாமாண்டு துறைத்தலைவர் முனைவர்.சிவமணி, மாணவர்கள் எந்த நேரத்திலும் அவர்களுடைய‌ தேவைகள் மற்றும் உதவிகளை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இதனையடுத்து, இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் கேசவமூர்த்தி, தொழில்நுட்ப வளர்ச்சியும் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து பேசினார்.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 2022 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் ரவிக்குமார் பேசியதாவது, ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது. ஆசிரியர்களை தீக்குச்சி என்று புகழ்ந்தார்.

சொந்தங்களை விட நட்பு பெரியது எனக்கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களுக்கு தாய் மொழி அறிவு அவசியம். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நகைச்சுவை மிக்க பேச்சால் கலையரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இறுதியாக கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி கூறியதாவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்லூரி முக்கியத்துவம் தருகிறது. மாணவர்கள் பெற்றோருக்கு மதிப்பு தர வேண்டும், மாணவர்களே கல்லூரியின் மிகப்பெரிய சொத்து.

இக்கல்லூரியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும், வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கின்றனர். உங்கள் வாழ்க்கையில் பொறியியல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லை. பொறியியலின் தேவை மற்றும் அதனின் வருங்கால வளர்ச்சி குறித்தும் பேசினார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...