நேரு குழந்தைகள் மையத்தின் சார்பில் விளையாட்டு தினவிழா


நேரு குழந்தைகள் மையத்தின் முதல் விளையாட்டு விழா நாள் பிப்ரவரி 4ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. நேரு குழந்தைகள் மையத்தின் இயக்குநர் பி.கிருஷ்ணகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

குழந்தைகள் அகாடமி முதல்வர் சைதன்யா கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியினை பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக துணை மாநகர ஆணையர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) ஜி.எஸ்.அனிதா பங்கேற்றார்.



இந்நிகழ்ச்சியில் நேரு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த குழந்தைகள், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் உடல், மனம் மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருந்தது.

மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 



இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...