கோவை சோமனூரில் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்

சோமனூரில் உள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் இன்று திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். மேலும் இதில் பங்கேற்ற அவர்கள், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்று வீரவணக்க முழக்கமிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், சோமனூர் அருகே அரசு பேருந்தில் உயர் சாதியினருக்கு இணையாக அமர்ந்தார் என்பதற்காக செகுடந்தாளி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

செகுடந்தாளி முருகேசன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நவம்பர் 17-ம் தேதியை சிறப்பு செய்யும் விதமாக அவரது நினைவு நாளையொட்டி வருடந்தோறும் அன்றைய நாளில் அப்பகுதியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அவரது நினைவு தினமான இன்று அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். இதில் ஒரு பகுதியாக கோவை-திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அவரது நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.



இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்ற பேனரை ஏந்தி வீரவணக்க முழக்கமிட்டனர்.



அதன் பின்னர் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...