கோவை சோமனூரில் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்

சோமனூரில் உள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் இன்று திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். மேலும் இதில் பங்கேற்ற அவர்கள், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்று வீரவணக்க முழக்கமிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், சோமனூர் அருகே அரசு பேருந்தில் உயர் சாதியினருக்கு இணையாக அமர்ந்தார் என்பதற்காக செகுடந்தாளி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

செகுடந்தாளி முருகேசன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நவம்பர் 17-ம் தேதியை சிறப்பு செய்யும் விதமாக அவரது நினைவு நாளையொட்டி வருடந்தோறும் அன்றைய நாளில் அப்பகுதியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அவரது நினைவு தினமான இன்று அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். இதில் ஒரு பகுதியாக கோவை-திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அவரது நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.



இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்ற பேனரை ஏந்தி வீரவணக்க முழக்கமிட்டனர்.



அதன் பின்னர் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...