கோவை சோமனூரில் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்

சோமனூரில் உள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் இன்று திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். மேலும் இதில் பங்கேற்ற அவர்கள், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்று வீரவணக்க முழக்கமிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், சோமனூர் அருகே அரசு பேருந்தில் உயர் சாதியினருக்கு இணையாக அமர்ந்தார் என்பதற்காக செகுடந்தாளி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

செகுடந்தாளி முருகேசன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நவம்பர் 17-ம் தேதியை சிறப்பு செய்யும் விதமாக அவரது நினைவு நாளையொட்டி வருடந்தோறும் அன்றைய நாளில் அப்பகுதியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அவரது நினைவு தினமான இன்று அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். இதில் ஒரு பகுதியாக கோவை-திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அவரது நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.



இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்ற பேனரை ஏந்தி வீரவணக்க முழக்கமிட்டனர்.



அதன் பின்னர் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...