கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் திறக்கப்படும் - ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் தகவல்

கோவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட குளிசாதன அறையை திறக்க வந்த ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் செயலி மூலம் ஆட்டோ புக் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தின் பின்புறம் அனுமதி வழங்க சிறப்பு மையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவது கோவை இரயில் நிலையமாகும். கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என்ற கட்டணத்தை செலுத்தி பயணிகள் காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயல்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இது குறித்து முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது:

பயணிகள் வசதிக்காக கட்டண முறையில் குளிர்சாதன அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் முதல் நடைமேடையில் இந்த அறை ரூ.12 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் வசதிக்காக இந்த அறையை பயன்படுத்தி கொள்வார்கள். நவீன முறையில் அமைந்துள்ள அறையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.



மேலும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் பின்புறம் செயலி மூலம் ஆட்டோ புக் செய்ய வசதி ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...