கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் திறக்கப்படும் - ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் தகவல்

கோவை ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட குளிசாதன அறையை திறக்க வந்த ரயில்வே வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் செயலி மூலம் ஆட்டோ புக் செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் நிலையத்தின் பின்புறம் அனுமதி வழங்க சிறப்பு மையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.



கோவை: சென்னைக்கு அடுத்தப்படியாக ரெயில்வேக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவது கோவை இரயில் நிலையமாகும். கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது நடைமேடையில் புதிய நவீன குளிர்சாதன காத்திருப்போர் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 என்ற கட்டணத்தை செலுத்தி பயணிகள் காத்திருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.



இந்த நவீன குளிர்சாதன அறையை கோவை ரயல்வே முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் திறந்து வைத்தார்.



இது குறித்து முதன்மை கோட்ட வணிகப்பிரிவு மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறும் போது:

பயணிகள் வசதிக்காக கட்டண முறையில் குளிர்சாதன அறை அமைக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் அதிக பயணிகள் வருவதால் முதல் நடைமேடையில் இந்த அறை ரூ.12 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் வசதிக்காக இந்த அறையை பயன்படுத்தி கொள்வார்கள். நவீன முறையில் அமைந்துள்ள அறையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்.



மேலும் கோவை ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து நடைமேடைகளுக்கு நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது கோவை ரயில் நிலையத்தில் செயலி மூலம் டாக்ஸி புக் செய்யும் மையம் உள்ளது. பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் பின்புறம் செயலி மூலம் ஆட்டோ புக் செய்ய வசதி ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...