சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்த நாள் விழா - கோவையில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்

கார்த்தி சிதம்பரத்தின் 51வது பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள 51 கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக தகவல்.


கோவை: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது 51வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனையொட்டி, கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற 51 திருக்கோவில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சாராதாம்பாள் கோவிலில் கார்த்தி சிதம்பரம் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஹரிஹரசுதன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி கலந்து கொண்டார். மேலும் ஐ.என்.டி.யூ.சி. தொழிற் சங்க தலைவர் கோவை செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதாகவும், அன்னதானம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...