திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தமிழக அரசின் அரசாணை 152 ஐ திரும்ப பெற வலியுறுத்த வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருகின்ற 16ஆம் தேதி காலை 11 மணிக்கு மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாகவும் பருவமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்ட அரங்கில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.



இதில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல ஆணையாளர்கள் , மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சிகளில் பணியாளர்களை குறைக்கும் வகையிலான அரசாணை 152ஐ தமிழக அரசு திரும்ப பெற மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.



இதன் பின்னறாக மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வாக்கு அளித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...