கோவை ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்துள்ளதாக டாக்ஸி டிரைவர் புகார்

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பியுள்ளதாக சித்தா புதூர் பகுதியைச் ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கார் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரிடம் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்க்கு 39.90 லிட்டர் அளவில் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது அவரது வாகனம் பாதி வழியில் நின்று உள்ளது.

அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையிலே ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இது குறித்து போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...