கோவை ஆவாரம்பாளையம் பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்த பெட்ரோல் விநியோகம் செய்துள்ளதாக டாக்ஸி டிரைவர் புகார்

ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் நிரப்பியுள்ளதாக சித்தா புதூர் பகுதியைச் ரமேஷ் என்பவர் அளித்த புகாரின் பெயரில் போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் கார் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவரிடம் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது வாகனத்திற்க்கு 39.90 லிட்டர் அளவில் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது அவரது வாகனம் பாதி வழியில் நின்று உள்ளது.

அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்கில் தண்ணீர் இருந்துள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால் பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையிலே ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் இது குறித்து போலிஸார் டாக்ஸி டிரைவர் மற்றும் பங்கு நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...